சட்பரி கொலை வழக்கில் 2 வாலிபர்கள் கைது
புதன்கிழமை அதிகாலை, பெரும்பாகம் சட்பரியின் கார்சன் பகுதிக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
இந்த வாரம் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்பரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை அதிகாலை, பெரும்பாகம் சட்பரியின் கார்சன் பகுதிக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். அங்கு இரண்டு இளைஞர்கள் கத்தியால் குத்தப்பட்டனர்.
17 வயதுடைய இளைஞன் ஒருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். மற்றொரு இளைஞரும் புதன்கிழமை பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் அவர் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
சட்பரி கொலை வழக்கில் சம்பவத்தில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் சரணடைந்தவுடன் கைது செய்யப்பட்டனர். சந்தேகக் குற்றவாளிகள் இருவரும் இரவோடு இரவாக காவலில் வைக்கப்பட்டு வியாழக்கிழமை பிணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.