பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த முழு அதிகாரங்களுடன் 13வது திருத்தம் அமல்படுத்தப்படும் – ஜனாதிபதி
மாகாண சபைகள் பட்டியலில் பட்டியல் 3 இல் குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் உட்பட அமல்படுத்தப்படும் என்றார்.
பாராளுமன்றத்தில் அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டிற்கு உட்பட்டு பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த முழு அதிகாரங்களுடன் 13வது திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வுக்கான தனது திட்டங்களைக் கோடிட்டுக் காட்டிய ஜனாதிபதி விக்ரமசிங்க, பட்டியல் 1 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த முழு அதிகாரங்களுடனான 13வது திருத்தம், மாகாண சபைகள் பட்டியலில் பட்டியல் 3 இல் குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் உட்பட அமல்படுத்தப்படும் என்றார்.
இதேவேளை, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்துக்கான சட்ட வரைவு அரசியலமைப்பு மீளாய்வுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.