நான் மல்யுத்த விளையாட்டை விட்டு வெளியேறுகிறேன்: சாக்ஷி மாலிக்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முன்னாள் வீராங்கனையான அனிதா ஷியோரனை 40க்கு 7 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், செய்தியாளர்களிடம் உணர்ச்சிவசப்பட்டு, மல்யுத்தத்திலிருந்து விலகப் போவதாகக் கூறினார். பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கின் விசுவாசியான சஞ்சய் சிங், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். டிசம்பர் 21, வியாழன் அன்று புது தில்லியில் நடைபெற்ற இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புத் தேர்தலில் சஞ்சய் சிங், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முன்னாள் வீராங்கனையான அனிதா ஷியோரனை 40க்கு 7 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியாவுடன் செய்தியாளர்களிடம் பேசிய சாக்ஷி மாலிக், கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் உடைந்து போனார். பிரிஜ் பூஷண் ஷரன் சிங் மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முந்தைய ஆட்சிக்கு எதிராக அதிகம் பேசப்பட்ட போராட்டத்தின் போது பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் வழங்கிய ஆதரவிற்கு சாக்ஷி நன்றி தெரிவித்தார்.
"நாங்கள் 40 நாட்கள் சாலைகளில் தூங்கினோம், நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் எங்களுக்கு ஆதரவாக வந்தனர். பிரிஜ் பூஷண் சிங்கின் வணிக கூட்டாளரும் நெருங்கிய உதவியாளரும் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நான் மல்யுத்தத்தை விட்டு விலகி விடுகிறேன்," என்று வியாழன் அன்று பிரஸ் கிளப் ஆஃப் இந்தியாவில் அவர் கூறினார்.