மீண்டும் இன, மத மோதல்களை தூண்ட அரசு சதி: அனுரகுமார
அனைத்து சமூகங்களினதும் ஒற்றுமைக்கு அச்சமடைந்த ஆட்சியாளர்கள் தற்போது மீண்டும் அவர்களை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் என திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தனது அரசியல் பிழைப்புக்காக நாட்டில் மீண்டும் இன, மத மோதல்களை தூண்ட முயற்சிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தைப் போலவே ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனல் இதுபோன்ற மோதலை தூண்டுவதில் முன்னிலை வகித்ததாக அவர் கூறினார்.
ஒய்வுபெற்ற முப்படைகள் மன்றத்தின் தேசிய மக்கள் சக்தி அனுராதபுரம் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், 75 வருடங்களாக நாட்டை அழித்த ஆட்சியாளர்களுக்கு எதிராக சிங்கள, முஸ்லிம், தமிழ் கீழ்மட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நின்றுள்ளனர்.
அனைத்து சமூகங்களினதும் ஒற்றுமைக்கு அச்சமடைந்த ஆட்சியாளர்கள் தற்போது மீண்டும் அவர்களை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் என திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஆட்சியாளர்கள் மக்களை வடக்கு, தெற்கு என பிரித்துவிட்டு, மீண்டும் சிங்களம், தமிழ், முஸ்லிம் எனப் பிரிக்க முயல்வதாகவும், ஆட்சியாளர்களின் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சிக்கு மக்கள் பலியாகக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். வகுப்புவாத மோதல்களால் பெரும் துன்பத்தை அனுபவித்துள்ளார்".