Breaking News
ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு பிணை வழங்கப்பட்டது
குற்ற புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஆயர் ஜெரோம், 500,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டார்.
புத்த பகவான் உட்பட பல்வேறு மதப் பிரமுகர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பான வழக்கில், ‘தீர்க்கதரிசி’ என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் புதன்கிழமை (ஜனவரி 03) காலை பிணை வழங்கியது.
குற்ற புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஆயர் ஜெரோம், 500,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டார்.
பிணை வழங்கப்பட்ட போதிலும், பாதிரியார் ஜெரோம் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நீதிமன்றம் தடை விதித்தது.
அவரது பிரசங்கம் ஒன்றின் காணொலி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதை அடுத்து, டிசம்பர் 01 அன்று சர்ச்சைக்குரிய போதகர் கைது செய்யப்பட்டார்.