சிறிலங்காவில் அடுத்த வாரம் மிகப்பெரிய ஆசிய பசுபிக் சுற்றுச்சூழல் மன்றம் நடைபெற உள்ளது
இந்த மன்றம் சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் மிகப்பெரிய பிராந்திய சுற்றுச்சூழல் நிகழ்வான அமைச்சர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகளின் ஐந்தாவது ஆசிய பசுபிக் மன்றம், கொழும்பில் ஒக்டோபர் 3 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த மன்றம் சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
25 அன்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பின் போது , சுற்றுச்சூழல் அமைச்சர் திரு. நசீர் அஹமட், இந்த குறிப்பிடத்தக்க சர்வதேச நிகழ்வில் 25 நாடுகளுடன் மற்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் ஆசிய பசுபிக்கின் 41 உறுப்பு நாடுகள் பங்கேற்கும் என்று அறிவித்தார். 16 அமைச்சர்கள் ஏற்கனவே தங்கள் வருகையை உறுதிப்படுத்தியுள்ளனர்.
300 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் 100 தொழில் வல்லுநர்கள் சிறிலங்காவின் பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்கள் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.