பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டலா?
இது முற்றிலும் பொய்யான செய்தி என்றும் இதில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை என்றும் நடிகை பூஜா ஹெக்டேவின் குழுவில் இருக்கும் ஒருவர் செய்தி சேனல் ஒன்றுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டேவுக்கு துபாயில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியான நிலையில், சமூக ஊடகங்களில் அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். இந்நிலையில், அது வதந்தி என பூஜா ஹெக்டே தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
நடிகை பூஜா ஹெக்டே துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு மும்பையில் இருந்து கிளம்பிச் சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டு நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே திரும்பி விட்டதாக தகவல்கள் வெளியாகின.
அங்கே நடந்த வாக்குவாதம் காரணமாக நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பாலிவுட்டின் பிரபல புகைப்படக் கலைஞர் வைரல் பஹாயானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுகையிட்ட பின்னர் ஊடகத் தளங்களில் இந்த விவகாரம் தீயாகப் பற்றிக் கொண்டது.
ஆனால், இது முற்றிலும் பொய்யான செய்தி என்றும் இதில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை என்றும் நடிகை பூஜா ஹெக்டேவின் குழுவில் இருக்கும் ஒருவர் செய்தி சேனல் ஒன்றுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை பூஜா ஹெக்டே இதுவரை சமூக ஊடக தளங்களில் எந்தவொரு இடுகையும் போடாமல் அமைதி காத்து வருகிறார்.