Breaking News
தங்கம் கடத்திய இலங்கைப் பெண் நேபாள விமான நிலையத்தில் கைது
இலங்கை குடிமகளான காந்தமாத்ரே கவாஸ்கர், தனது உள்ளாடையில் மறைத்துப் பொடி வடிவில் தங்கத்தை கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் உள்ள திரிபுவன் பன்னாட்டு விமான நிலையத்தில் சட்டவிரோதமாகத் தங்கம் வைத்திருந்த இலங்கைப் பெண்ணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இலங்கை குடிமகளான காந்தமாத்ரே கவாஸ்கர், தனது உள்ளாடையில் மறைத்துப் பொடி வடிவில் தங்கத்தை கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயில் இருந்து வந்த பெண் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாக திரிபுவன் பன்னாட்டு விமான நிலைய பாதுகாப்புத் தலைவர் டிஐஜி அர்ஜுன் சந்த் தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் எடை 1 கிலோ 300 கிராம் என அவர் தெரிவித்துள்ளார்.