கோரிக்கைகளுக்கு பதிலளிக்காவிட்டால் ஒரு வார வேலை நிறுத்தம் நடத்துவோம்: புகையிரத நிலைய அதிபர்கள் மிரட்டல்
குறித்த கலந்துரையாடலின் போது பயனுள்ள தீர்வு வழங்கப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன நம்பிக்கை தெரிவித்தார்.
எதிர்வரும் செவ்வாய்கிழமை (மே 16) நடைபெறவுள்ள கூட்டத்தை தொடர்ந்து அமைச்சரினால் தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாவிடின் ஒரு வார கால வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த கலந்துரையாடலின் போது பயனுள்ள தீர்வு வழங்கப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன நம்பிக்கை தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (மே 10) ஆரம்பிக்கப்பட்ட 24 மணித்தியால வேலைநிறுத்தம் வெற்றியடைந்ததாகக் கருதிய சோமரத்ன, அமைச்சின் செயலாளர் இந்த விடயத்தில் இப்போதாவது தலையிட்டு அதற்கேற்ப ரயில்வே பொது முகாமையாளருக்கு ஆலோசனை வழங்குவார் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
எமக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், எந்த நேரத்திலும் பரந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்” என சோமரத்ன அச்சுறுத்தினார். மேலும், "ரயில்வே திணைக்களம் மற்றும் அவர்களது ஊழியர்களின் எதிர்காலம் சார்பாக அடுத்த வாரத்திற்குள் தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்க தயாராக உள்ளோம்" என்றார்.