Breaking News
தேர்வுகளை நடத்தும்போது மாணவர்களின் வசதிக்கே முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தல்
கல்வி அமைச்சும் தேர்வுகள் திணைக்களமும் மாணவர்களின் சௌகரியத்திற்கும் முன்னேற்றத்திற்கும் முன்னுரிமை கொடுப்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அறிமுகமில்லாத சூழலில் தேர்வு எழுதும் போது மாணவர்கள் எதிர்நோக்கும் இடையூறுகள் குறித்து கவலை வெளியிட்டார். கல்வி அமைச்சும் தேர்வுகள் திணைக்களமும் மாணவர்களின் சௌகரியத்திற்கும் முன்னேற்றத்திற்கும் முன்னுரிமை கொடுப்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை உணர்ந்த ஜனாதிபதி, தேர்வு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில், குறைந்தபட்சம் 75 தகுதியுள்ள மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளைத் தேர்வு நிலையங்களாக மாற்றுமாறு கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு அவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.