சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்காலப் பிணை நிவாரணம் இல்லை
"இது ஒரு அரசியல் வழக்கைத் தவிர வேறில்லை. மேலும் 17 ஏ பிரிவின் கடுமை இந்த விஷயத்தில் பொருந்தும்" என்று சால்வே கூறினார்.
பல கோடி திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) தலைவரும் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்கால நிவாரணம் வழங்கவில்லை. நாயுடுவின் சிறைவாசத்தை மேலும் 6 நாட்கள் நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாயுடுவின் முதல் தகவல் அறிக்கையி இரத்து செய்யக் கோரும் மனுவை அடுத்த வாரம் திங்கள்கிழமை விசாரிப்பதாகவும், அரவிக்கை அனுப்புவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பேலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஆந்திர அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களையும் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டது.
இந்த வழக்கின் விசாரணையை 2017 ஆம் ஆண்டு சிபிஐ தொடங்கியுள்ள நிலையில், ஊழல் தடுப்புச் சட்டம் 17ஏ பிரிவு ஜூலை 2018 இல் வந்ததால், முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரிய நாயுடுவின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று ரோஹத்கி கூறினார்.
நாயுடு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே, அபிஷேக் சிங்வி மற்றும் சித்தார்த் லுத்ரா ஆகியோர், முதல் தகவல் அறிக்கையில் உள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் நாயுடு மாநில முதல்வராக இருந்தபோது எடுத்த முடிவுகள், அறிவுறுத்தல்கள் அல்லது பரிந்துரைகள் தொடர்பானவை என்று கூறினார்.
"இது ஒரு அரசியல் வழக்கைத் தவிர வேறில்லை. மேலும் 17 ஏ பிரிவின் கடுமை இந்த விஷயத்தில் பொருந்தும்" என்று சால்வே கூறினார்.
அவர்கள் அவரை பல முதல் தகவல் அறிக்கைகளில் சிக்க வைக்கிறார்கள் என்றும் இது ஆட்சி மாற்றத்தின் தெளிவான வழக்கு என்றும் லூத்ரா கூறினார்.