பன்னாட்டு விசாரணை இல்லை: ஜனாதிபதி ரணில்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் உட்பட எந்தவொரு பிரச்சினையிலும் சிறிலங்கா அரசாங்கம் பன்னாட்டு விசாரணையை மேற்கொள்ளாது என்று விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜெர்மனியை தளமாகக் கொண்ட பன்னாட்டு ஒளிபரப்பு நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது, 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாகப் பிரித்தானிய தொலைக்காட்சி வலையமைப்பான சனல் 4 ஒளிபரப்பிய ஆவணப்படத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைக் கடுமையாகச் சாடினார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் உட்பட எந்தவொரு பிரச்சினையிலும் சிறிலங்கா அரசாங்கம் பன்னாட்டு விசாரணையை மேற்கொள்ளாது என்று விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
இலங்கையில் உள்ள பல கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சொகுசு தங்கும் விடுதி களை குறிவைத்து 2019 உயிர்த்த ஞாயிறு அன்று நடந்த குண்டுவெடிப்புகள் தொடர்பான திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் அடங்கிய சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை செப்டம்பர் 06 அன்று சேனல் 4 ஒளிபரப்பியது. இந்தப் படுகொலையில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.