Breaking News
செவனகல சீனி தொழிற்சாலை அரசாங்கத்தின் நெருங்கிய கூட்டாளிக்கு வழங்கப்படவுள்ளது: சஜித் பிரேமதாச
அண்மைய அமைச்சரவை மாற்றம் செவனகல தொழிற்சாலையை தனியார் மயமாக்குவதுடன் தொடர்புடையது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்திற்குச் சொந்தமான செவனகல சீனி தொழிற்சாலையை அரசாங்கத்தின் நெருங்கிய கூட்டாளியிடம் ஒப்படைக்க உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அதன் எதிர்காலம் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.
மாத்தளை நுகேகொல்ல ம.வி.யில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய திரு.பிரேமதாச, இந்த பொதுச் சொத்தின் கதி என்னவென்பதை அறிந்து கொள்வதற்கு பாடசாலை மாணவர்கள் உட்பட நாட்டு மக்களுக்கு உரிமை உண்டு என வலியுறுத்தினார். அண்மைய அமைச்சரவை மாற்றம் செவனகல தொழிற்சாலையை தனியார் மயமாக்குவதுடன் தொடர்புடையது என அவர் வலியுறுத்தியுள்ளார்.