மகாராஷ்டிரா பேரணியில் பேசியபோது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்தார்
கட்சித் தொண்டர்கள் பலர் நிதின் கட்கரியின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரை மேடையில் இருந்து அழைத்துச் செல்வதைக் காண முடிந்தது.
மகாராஷ்டிராவின் யவத்மாலில் புதன்கிழமை தேர்தல் பேரணியில் உரையாற்றிய மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி மேடையில் மயங்கி விழுந்தார். உடனடியாக கட்கரி சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
யவத்மாலின் புசாத்தில் நடந்த தேர்தல் பேரணியில் கட்கரி திடீரென மயங்கி மேடையில் சரிந்தார். அவரது கட்சி உறுப்பினர்கள் துரித நடவடிக்கை எடுத்தனர், அவர்கள் உடனடியாக மூத்த தலைவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து மருத்துவ உதவிக்கு கொண்டு சென்றனர்.
கட்சித் தொண்டர்கள் பலர் நிதின் கட்கரியின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரை மேடையில் இருந்து அழைத்துச் செல்வதைக் காண முடிந்தது.
இருப்பினும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பின்னர் ட்வீட் செய்தபோது, வெப்பம் காரணமாக தான் அசௌகரியமாக உணர்ந்ததாகவும், அவர் நலமாக இருப்பதாகவும், வருட்டில் அடுத்த தேர்தல் பேரணியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார்.