Breaking News
கே.பி.ஒலி கட்சியுடன் கைகோர்த்த நேபாள பிரதமர் பிரசண்டா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
பிரதிநிதிகள் சபையில் மூன்றாவது பெரிய கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியைச் (மாவோயிஸ்ட் மையம்) சேர்ந்த 69 வயதான பிரசண்டா, 275 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில்157 வாக்குகளைப் பெற்றார்.
நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் 'பிரசண்டா' புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார்.
பிரதிநிதிகள் சபையில் மூன்றாவது பெரிய கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியைச் (மாவோயிஸ்ட் மையம்) சேர்ந்த 69 வயதான பிரசண்டா, 275 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில்157 வாக்குகளைப் பெற்றார்.
காத்மாண்டுவில் உள்ள நயா பனேஷ்வரில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் 268 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். அவருக்கு எதிராக 110 வாக்குகள் பதிவாகின. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற பிரசண்டாவுக்கு 138 வாக்குகள் தேவை.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் வெற்றி பெற்றுவிட்டதாக சபாநாயகர் தேவ் ராஜ் கிமிரே அறிவித்தார்.