Breaking News
பதிவாளர் நாயகம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளார்: நீதிமன்றம் தீர்ப்பு
பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு 3.3 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் கடமையாற்றும் உதவிப் பதிவாளர்களின் பதவி உயர்வு பரீட்சையை காலவரையறையின்றி பிற்போடுவதன் மூலம் அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு 3.3 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதியரசர்களான காமினி அமரசேகர மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா வழங்கிய தீர்ப்பில், அரசாங்க அதிகாரிகள் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்கத் தவறுவது மக்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் பொது சேவையின் செயல்திறனைக் குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.