சீனாவில் அமெரிக்க கல்லூரி ஆசிரியர்கள் நால்வரை கத்தியால் குத்தியவர் கைது
ஜிலின் நகர காவல்துறையினர் கூறுகையில், 55 வயதான குய் என்ற புனைப்பெயர் கொண்டவர் திங்களன்று ஒரு பொது பூங்காவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர் ஒரு வெளிநாட்டவர் மீது மோதினார்.

வடகிழக்கு நகரமான ஜிலினில் உள்ள சீன பல்கலைக்கழகத்தில் கற்பித்துக் கொண்டிருந்த அயோவாவின் கார்னெல் கல்லூரியைச் சேர்ந்த நான்கு பயிற்றுவிப்பாளர்கள் மீது கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகக் குற்றவாளியைச் சீன காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து ஜிலின் நகர காவல்துறையினர் கூறுகையில், 55 வயதான குய் என்ற புனைப்பெயர் கொண்டவர் திங்களன்று ஒரு பொது பூங்காவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர் ஒரு வெளிநாட்டவர் மீது மோதினார். அவர் வெளிநாட்டவர் மற்றும் அவருடன் இருந்த மூன்று வெளிநாட்டினரை கத்தியால் குத்தினார் என்றும் தலையிட முயன்ற ஒரு சீன நபரையும் கத்தியால் குத்தினார் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கார்னெல் கல்லூரியைச் சேர்ந்த பயிற்றுவிப்பாளர்கள் பெய்ஹுவா பல்கலைக்கழகத்தில் கற்பித்து வந்ததாக அமெரிக்கப் பள்ளி அதிகாரிகள் தெரிவித்தனர்.