Breaking News
எரான் விக்ரமரத்ன கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிடவுள்ளார்
ஏற்கனவே ஒரு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவை நியமிப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாநகர சபையில் ஒரு பதவிக்கு விக்ரமரத்னவை நியமிக்க கட்சிக்குள் ஏற்கனவே ஒரு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.