அமெரிக்க வரிவிதிப்பால் சிறிலங்காவில் 100,000 வேலை இழப்புகள் ஏற்படும்: ரணில் எச்சரிக்கை
வளர்ந்து வரும் நெருக்கடியை நிவர்த்தி செய்ய அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்குமாறு அரசாங்கத்தை ரணில் விக்ரமசிங்கவலியுறுத்தினார்.

அமெரிக்கா நடைமுறைப்படுத்தியுள்ள புதிய வர்த்தக வரிக்கொள்கையின் விளைவாகச் சிறிலங்காவில் 100,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் இழக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.
புதனன்று (16) ஒரு விசேட அறிக்கையை வெளியிட்ட விக்ரமசிங்க, நிலைமையை பொருளாதார அவசரநிலை என்று விவரித்ததுடன், வளர்ந்து வரும் நெருக்கடியை நிவர்த்தி செய்ய அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
"வரிவிதிப்புகள் அதிகரிக்கும் போது, பொருட்களுக்கான நுகர்வோர் தேவை குறைகிறது. இது ஒரு கற்பனையான நிலைமை அல்ல. அது ஏற்கனவே கட்டவிழ்ந்து வருகிறது. இதன் ஒரு நேரடி விளைவு வேலை இழப்புகள். 100,000 க்கும் மேற்பட்ட வேலைகள் ஆபத்தில் இருப்பதாக சிலர் மதிப்பிட்டுள்ளனர். எண்ணிக்கை சரியாக இருந்தாலும் சரி அல்லது சற்று குறைவாக இருந்தாலும் சரி, இந்த எண்ணிக்கை உயரும்" என்று அவர் வலியுறுத்தினார்.