ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை
துபாயின் பல பகுதிகளில் பெய்த மழையால் வெள்ளம் சூழ்ந்தது. புயல் காரணமாக துபாய் விமான நிலையத்தில் விமான சேவை சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. துபாயின் பல பகுதிகளில் பெய்த மழையால் வெள்ளம் சூழ்ந்தது. புயல் காரணமாக துபாய் விமான நிலையத்தில் விமான சேவை சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
"தீவிர புயல் காரணமாக, துபாய் விமான நிலையத்தில் நடவடிக்கைகள் தற்காலிகமாக 25 நிமிடங்கள் நிறுத்தப்பட்டன, ஆனால் பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. விமான நிலையத்திற்கு செல்லும் சாலைகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் நிலையற்ற வானிலை நாளை காலை வரை தொடரும் என்று கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன" என்று துபாய்ப் பன்னாட்டு விமான நிலையத்தின் எக்ஸ் கணக்கு ஒரு பதிவிட்டுள்ளது.
"உங்கள் விமான நிறுவனத்துடன் உங்கள் விமானத்தின் பறக்கும் நிலையைச் சரிபார்க்கவும். விமான நிலையத்திற்கு குறிப்பிடத்தக்க கூடுதல் பயண நேரத்தை அனுமதிக்கவும், சுமூகமான போக்குவரத்துக்கு துபாய் மெட்ரோவைப் பயன்படுத்தவும் நினைவில் கொள்ளுங்கள்" என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.