பகடிவதை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை
கைது செய்யப்பட்ட சந்தேகக் குற்றவாளிகள் 23, 24 மற்றும் 25 வயதுடையவர்கள், பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானங்கள் மற்றும் மொழிகள் பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவியை பகடிவதை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 மாணவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு நேற்று (ஜனவரி 29) முற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, சந்தேகக் குற்றவாளிகள் 7 பேரும் தலா ஒரு இலட்சம் ரூபா சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவியை பகடிவதை செய்த குற்றச்சாட்டில் சமனவெவ கவல்துறையினரால் 6 ஆண் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனவரி 14 ஆம் திகதி '1997' துரித தொலைபேசிக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சமனவெவ கவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகக் குற்றவாளிகள் 23, 24 மற்றும் 25 வயதுடையவர்கள், பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானங்கள் மற்றும் மொழிகள் பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவியான ஏழாவது சந்தேக குற்றவாளி சமனவெவ கவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.