ஆதரவற்ற பழங்குடியினரைத் தலையில் உதைத்த ஹாமில்டன் காவல்துறை அதிகாரி தகுதிகாண் சேவை செய்யவேண்டும்: நீதிபதி கூறுகிறார்
நீதிபதி பக்ஸ்லி, ரென்னை விடுவிக்க வேண்டும் என்ற எதிர் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை நிராகரித்தார்.
கைது செய்யப்பட்ட ஒரு பழங்குடியினரை தாக்கியதற்காக ஹாமில்டன் காவல்துறை அதிகாரி பிரையன் ரென் 18 மாதங்கள் தகுதிகாண் நன்னடத்தைச் சேவை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வியாழன் அன்று, ஒன்றாரியோ நீதிமன்ற நீதிபதி புரூஸ் பக்ஸ்லி, உதவியற்ற கைதியைத் தாக்குவது என ரெனின் செயல்களை விவரித்தார்.
ரென், கடந்த மே மாதம் பேட்ரிக் டோம்சுக்கை தாக்கியபோது, சாதாரண உடையில் காவல்துறைப் பிரிவின் சார்ஜெண்டாக செயல்பட்டார்.
"டொம்சுக் ஏற்கனவே தரையில் படுத்திருந்தார். எதிர்க்காமல், சுயநினைவின்றி அவர் இருந்தார். அவர் கைவிலங்கிடப்பட்டார். பல அதிகாரிகளால் அவர் கட்டுப்படுத்தப்பட்டார். அப்போது ரென் அவரை தலையிலும் முகத்திலும் பலமுறை உதைத்தார்," என்று நீதிபதி பக்ஸ்லி கூறினார்.
"ரென் டாம்சுக்கை மிகவும் கடுமையாக உதைத்தார், அவர் தனது கால்விரலை உடைத்தார்," என்று நீதிபதி பக்ஸ்லி குறிப்பிட்டார்.
"பிரதிவாதியிடமிருந்து எந்த உதவியும் தேவையில்லை" என்று நீதிபதி பக்ஸ்லி ஜூம் அழைப்பு மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். "பிரதிவாதி பயன்படுத்திய பலம் எந்த வகையிலும் நியாயமானது அல்ல. ஒருவர் தலையில் அடிபட்டதால் இறக்கலாம்."
நீதிபதி பக்ஸ்லி, ரென்னை விடுவிக்க வேண்டும் என்ற எதிர் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை நிராகரித்தார். இந்த வகை தண்டனையானது ரெனுக்கு குற்றவியல் பதிவு இல்லை என்று அர்த்தம். மேலும் அவர் ஒரு காவல்துறை அதிகாரியாக தொடர்ந்து பணியாற்ற முடியும் என்று நீதிபதி பக்ஸ்லி கூறினார்.
"ஒரு விடுவிப்பு என்பது காவல்துறைக்கு ஒரு தண்டனைப் பாதையும், பொதுமக்களுக்கு மற்றொன்றும் இருக்கிறது என்ற தவறான செய்தியை அனுப்பும்" என்று நீதிபதி பக்ஸ்லி கூறினார். "பொதுமக்களில் ஒருவர் காவல்துறை அதிகாரியை தலையிலும் தரையிலும் எட்டி உதைத்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதாவது பாத்திரங்கள் தலைகீழாக மாற்றப்பட்டால் என்னவாகும் என்பதைக் கவனியுங்கள்."
ரென் தற்போது ஹாமில்டன் காவல்துறைச் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரென் பணிநீக்கம் செய்யப்படுவாரா அல்லது அதிகாரியாக தொடர்வதா என்பதை ஹாமில்டன் காவல்துறை தீர்மானிக்க ஒரு பிற்காலத்தில் ஒழுங்கு விசாரணை நடைபெறும்.