ராஜஸ்தானில் பிரதமரின் பேரணிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 6 காவல்துறையினர் பலி
தேசிய நெடுஞ்சாலை 58 இல் சுரு மாவட்டத்தில் உள்ள பாக்சாரா கிராமத்தை அதிகாரிகள் அடைய முயன்றபோது இந்த சம்பவம் நடந்தது.
ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை லாரி மீது வாகனம் மோதியதில் 6 காவல்துறையினர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார். ஜுன்ஜுனுவில் இன்று நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பேரணியில் விஐபி பாதுகாப்பு பணிக்கு இந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் நாகௌரிலிருந்து அந்த இடத்திற்கு சென்று கொண்டிருந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
தேசிய நெடுஞ்சாலை 58 இல் சுரு மாவட்டத்தில் உள்ள பாக்சாரா கிராமத்தை அதிகாரிகள் அடைய முயன்றபோது இந்த சம்பவம் நடந்தது. அடர்த்தியான மூடுபனி காரணமாக பார்வை குறைவாக இருந்ததால் கார் லாரி மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் காவல்துறையினர் பயணம் செய்த மஹிந்திரா சைலோ எக்ஸ்யூவி கார் நொறுங்கியது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலும், ஒருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். காயமடைந்த அதிகாரியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.