குவைத்தில் வல்லுறவுக்கு ஆளான பாதிக்கபட்ட வீட்டுப் பணிப்பெண்ணுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது
இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்காக குறித்த பெண்ணை சக்கர நாற்காலியில் அமர வைத்து விமான நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
சிறிலங்காவைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர், நீண்ட சட்டப் போராட்டத்தின் பின்னர், குவைத்தில் உள்ள தனது முதலாளியிடமிருந்து 6.8 மில்லியன் ரூபா நட்டஈடு செலுத்தப்பட்டு இன்று நாடு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
32 வயதுடைய பெண் முதலாளியின் மகனால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் கருக்கலைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்காக குறித்த பெண்ணை சக்கர நாற்காலியில் அமர வைத்து விமான நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். எவ்வாறாயினும், பயணிப்பதற்கு அவரது உடல்நிலை சரியில்லை என்று கூறிய விமான நிலைய அதிகாரிகள், குவைத்தில் உள்ள சிறிலங்காத் தூதரகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
குவைத்தில் உள்ள சிறிலங்கத் தூதுவர் காண்டீபன் சுப்ரமணியம் சட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு அந்தப் பெண்ணுக்கான இழப்பீட்டுத் தொகையைப் பெற முடிந்தது. இழப்பீடாக குவாத்தி தினார் 6,500 (ரூ 6.8 மில்லியன்) வழங்கப்பட்டது.
அந்த பெண், அந்த காலகட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தூதரகத்தால் கவனித்துக் கொள்ளப்பட்டார்.