Breaking News
செங்கடலில் மேலும் பல அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மிரட்டல்
அமெரிக்கா தனது கடல்சார் பாதுகாப்பை இழக்கும் விளிம்பில் உள்ளது.
யேமனின் ஹவுத்தி இயக்கம் செங்கடல் பிராந்தியத்தில் தனது இலக்குகளை விரிவுபடுத்தி அமெரிக்க கப்பல்களையும் உள்ளடக்கும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. யேமனில் உள்ள அதன் தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் தாக்குதல்களுக்குப் பிறகு தாக்குதல்களைத் தொடரப்போவதாக ஈரான் நட்புக் குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் திங்களன்று தெரிவித்தார்.
"கப்பல் இஸ்ரேலை குறிவைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அது அமெரிக்கராக இருந்தால் போதும்" என்று அமீர் கூறினார். அமெரிக்கா தனது கடல்சார் பாதுகாப்பை இழக்கும் விளிம்பில் உள்ளது.
இஸ்ரேல் கப்பல்கள் அல்லது இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை மட்டுமே குறி வைப்போம் என்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் முன்பு தெரிவித்திருந்தனர்.