வாடிக்கையாளர்களை வலுப்படுத்த வங்கிச் சட்டம் இந்த வாரம் பாராளுமன்றத்தில் முன்வைப்பு: சியம்பலாபிட்டிய
ருவன்வெல்லவில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், முழு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தச் சட்டம் மிகவும் முக்கியமானது.
நாட்டில் எவ்வாறான பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அல்லது வங்கிகள் எவ்வாறான நிலைமைகளை எதிர்கொண்டாலும் வாடிக்கையாளரை 100 வீதம் பலப்படுத்துவதே இந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வங்கியியல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் நோக்கம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்லவில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், முழு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தச் சட்டம் மிகவும் முக்கியமானது.
"இந்த சட்டம் வாடிக்கையாளரை வழக்கத்தை விட பலப்படுத்துவதற்கான சட்ட கட்டமைப்பை உருவாக்கும். ஒரு நிதி நிறுவனத்தின் ஸ்திரத்தன்மை குறைந்தால், 57.2 மில்லியன் வாடிக்கையாளர்களிடமிருந்து சுமார் 15 டிரில்லியன் ரூபாய் வைப்புத்தொகையின் பாதுகாப்பிற்காக மத்திய வங்கி தலையிட இது ஒரு வாய்ப்பை வழங்கும். ," என்றார் சியம்பலாபிட்டிய.
ஒவ்வொரு வங்கியும் தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக காப்புறுதி வைத்திருப்பதை இந்த சட்டம் கட்டாயமாக்குகிறது என்றும் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.