Breaking News
மாஸ்கோ தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்
"இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கம் மற்றும் மக்களுடன் இந்தியா ஒற்றுமையுடன் துணையாக நிற்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.
மாஸ்கோ அருகே 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மாஸ்கோவில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் எண்ணங்களும் வேண்டுதல்களும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் உள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.
"இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கம் மற்றும் மக்களுடன் இந்தியா ஒற்றுமையுடன் துணையாக நிற்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.