Breaking News
அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேர் பிணையில் விடுவிப்பு
100,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 400,000 ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளிலும் நீதவானால் விடுவிக்கப்பட்டனர்.
பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட மேலும் 32 பேர் கம்பஹா மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் 100,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 400,000 ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளிலும் நீதவானால் விடுவிக்கப்பட்டனர்.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான சஹான் மாபா பண்டார (தலைவர்), ரஷிமி சிங்கப்புலி மற்றும் டி ஏ ருவன் பத்திரன ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னதாக பிணையில் விடுவிக்கப்பட்ட 5 பேர் உட்பட குற்றம் சாட்டப்பட்ட 37 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.