Breaking News
முன்னாள் ஜனாதிபதி ரணில் விசேட கலந்துரையாடல்
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவரை ஆதரித்த கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (30) பிற்பகல் கொழும்பிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் விசேட அரசியல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவரை ஆதரித்த கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, உதய கம்மன்பில, அனுர பிரியதர்ஷன யாப்பா, துமிந்த திசாநாயக்க, காஞ்சன விஜேசேகர, சாகல ரத்நாயக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.