மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி, 60 பேர் காயம்
பிரதமர் நரேந்திர மோடி இது ஒரு "மிகவும் சோகமான" சம்பவம் என்றும், "அன்புக்குரியவர்களை இழந்த பக்தர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்" என்றும் தெரிவித்தார்.

பிரயக்ராஜில் உள்ள மகா கும்பமேளாவில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் கொல்லப்பட்டனர். இதில் 60 பேர் காயமடைந்தனர். இரண்டாவது ஷாஹி ஸ்னான் (அரச குளியல்) நாளான மவுனி அமாவாசையில் (அமாவாசை) புனித நீராடுவதற்காக திரிவேணி சங்கமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
அதிகாலை 1 மணி முதல் 2 மணி வரை ஏற்பட்ட மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், மீதமுள்ள 5 பேரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது" என்று டிஐஜி மகா கும்பமேளா வைபவ் கிருஷ்ணா செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி இது ஒரு "மிகவும் சோகமான" சம்பவம் என்றும், "அன்புக்குரியவர்களை இழந்த பக்தர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்" என்றும் தெரிவித்தார்.
"பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் நடந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மேலும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவுவதில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது" என்று பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.