மொரகொல்லை நீர்மின் திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடன் பெற சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல்
30 மில்லியன் அமெரிக்க டொலர்களை சிறிய செலவு நிதி வசதிகளின் கீழ் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
மொரகொல்லை நீர் மின்சார வேலைத்திட்டத்தினை நிறைவு செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பொது மூலதன வளங்களிலிருந்து 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை நேரடியாக இலங்கை மின்சார சபைக்கு இரண்டு தவணைகளில் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சிறிலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு, மொரகொல்ல நீர்மின் திட்டத்தின் நிர்மாணம் மற்றும் நிர்மாணத்திற்குப் பின்னரான நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கும், புதுப்பிக்கத்தக்க சக்தி அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட நிரப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி அதன் பொது மூலதன வளங்களிலிருந்து 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை சிறிய செலவு நிதி வசதிகளின் கீழ் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அதற்கமைய குறித்த கடன் தொகையினை இலங்கை மின்சார சபைக்கு நேரடியாக இரண்டு தவணைகளில் பெற்றுக் கொள்வது தொடர்பில் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.