றோயல் பார்க் வழக்கில் ஜூட் ஜயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை இரத்து செய்தது உயர் நீதிமன்றம்
அரசியலமைப்பு ஏற்பாடுகளை பின்பற்றாத குற்றச்சாட்டில் சமந்த ஜூட் என்டனி ஜயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை இரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.
![](https://tamil.voiceforjustice.ca/uploads/royal-park-case.jpg)
றோயல் பார்க் கொலைக் குற்றவாளியான டொன் சமந்த ஜூட் என்டனி ஜயமஹாவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவு தன்னிச்சையானது மற்றும் சட்டப்படி செல்லுபடியாகாது என்று உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, அரசியலமைப்பு ஏற்பாடுகளை பின்பற்றாத குற்றச்சாட்டில் சமந்த ஜூட் என்டனி ஜயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை இரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.
மேற்குறிப்பிட்ட பிரதிவாதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியபோது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மனுதாரரின் அடிப்படை உரிமைகள் மற்றும் பொது நம்பிக்கை கோட்பாட்டை மீறியுள்ளார் என்று உயர் நீதிமன்றம் அறிவித்தது.
ரோயல் பார்க் கொலைக் குற்றவாளிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானத்தின் சட்டபூர்வ தன்மையை சவாலுக்கு உட்படுத்திப் பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பு இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தது.
இந்த தீர்ப்பை கருத்திற்கொண்டு, ஜூட் ஜயமஹவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் சட்ட பிரகாரமாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.