வங்கதேச பத்திரிகையாளர் சடலம் ஏரியில் கண்டெடுக்கப்பட்டது
அதிகாலை 2 மணியளவில் (உள்ளூர் நேரம்) வந்தவுடன் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
வங்கதேசத்தில் உள்ள ஏரி ஒன்றில் இருந்து 32 வயது பெண் பத்திரிகையாளரின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சாரா ரஹனுமா என அடையாளம் காணப்பட்ட அவர், வங்க மொழி செய்தித் தொலைக்காட்சியின் செய்தி அறை ஆசிரியராக இருந்தார்.
புதன்கிழமை அதிகாலை டாக்காவின் ஹதிர்ஜீல் ஏரியில் ரஹனுமாவின் உடல் மிதந்தது. அந்த நிலையில் அவரைப் பார்த்த ஒரு வழிப்போக்கர், ஏரியிலிருந்து உடலை இழுத்து டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (டிஎம்சிஎச்) கொண்டு சென்றார். இருப்பினும், அதிகாலை 2 மணியளவில் (உள்ளூர் நேரம்) வந்தவுடன் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
மருத்துவமனைப் புறக்காவல் பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் பச்சு மியா, அவரது உடல் மீட்கப்பட்டதை உறுதி செய்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.