Breaking News
அரசின் கட்டுப்பாடுகளால் மணிப்பூரில் 'பாரத் நியாய யாத்ரா' நடைபெறும் இடத்தை காங்கிரஸ் மாற்றியது
இம்பாலின் ஹப்தா கங்ஜெய்புங்கிலிருந்து தொடங்க திட்டமிடப்பட்ட யாத்திரை, இப்போது தௌபால் மாவட்டத்தில் உள்ள கோங்ஜோம் கிராமத்தில் நடைபெறும்.
மணிப்பூரில் ராகுல் காந்தி தலைமையிலான 'பாரத் ஜோடோ நியாய யாத்ரா' நடைபயணத்திற்கான இடம் மாற்றப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இந்த யாத்திரை மணிப்பூரில் இருந்து ஜனவரி 14ஆம் தேதி தொடங்க உள்ளது.
முன்னதாக இம்பாலின் ஹப்தா கங்ஜெய்புங்கிலிருந்து தொடங்க திட்டமிடப்பட்ட யாத்திரை, இப்போது தௌபால் மாவட்டத்தில் உள்ள கோங்ஜோம் கிராமத்தில் நடைபெறும்.
என் பிரேன் சிங்கின் கீழ் ஆளும் அரசாங்கம் யாத்திரையை தாமதப்படுத்த 'தந்திரங்களை' கையாண்டதாக மணிப்பூர் முன்னாள் முதல்வர் ஓ இபோபி குற்றம் சாட்டினார். மணிப்பூர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி (எம்பிசிசி) தலைவர் கே மேகசந்திரா ஜனவரி 2 ஆம் தேதி பாதுகாப்பு ஒப்புதலைக் கோரியதாகவும், ஆனால் மாநில உள்துறை தெளிவான வழிகாட்டுதலை வழங்கவில்லை என்றும் இபோபி மேலும் கூறினார்.