Breaking News
டிக்வெல்லாவுக்கு 3 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை?
அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்பதில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) உறுதிப்படுத்தியது.
இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்லவுக்கு 3 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 16 அன்று, ஊக்கமருந்து எதிர்ப்பு மீறல் காரணமாக டிக்வெல்ல உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்பதில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) உறுதிப்படுத்தியது.
அண்மையில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரின் போது ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் டிக்வெல்லா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.