நவீனமயமாக்கப்பட்ட கல்வி முறையை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஜனாதிபதி வெளிப்படுத்தினார்
நுகேகொட அனுலா வித்தியாலயத்தில் இடம்பெற்ற 2019/2020 வருடாந்த பரிசளிப்பு விழாவின் போதே ஜனாதிபதி விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வரவிருக்கும் உலகளாவிய சவால்களை திறம்பட எதிர்கொள்ளக்கூடிய மற்றும் நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய நவீனமயமாக்கப்பட்ட கல்வி முறையை நாட்டில் அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.
உலகப் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியப் பங்கை அவர் எடுத்துரைத்தார். செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், ஆற்றல் சேமிப்பு, பிளாக்செயின் தொழில்நுட்பம் மற்றும் மரபணு அறிவியல் போன்ற துறைகள் உலகப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
நுகேகொட அனுலா வித்தியாலயத்தில் இடம்பெற்ற 2019/2020 வருடாந்த பரிசளிப்பு விழாவின் போதே ஜனாதிபதி விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த கால அரசியல் மரபுகளில் இருந்து விலகி, எதிர்காலத்தை நோக்கி கூட்டாக முன்னேற வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். நாட்டின் முன்னேற்றம் ஒரு புதிய கல்வி முறையைத் தழுவியதில் தங்கியுள்ளது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.