கமல்ஹாசனுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்
கமல்ஹாசன் ஒரு காலத்தில் பெரிய நடிகராகவும், ஹீரோவாகவும் இருந்தார். எல்லோருக்கும் அவரை பிடிக்கும்" என்று அவர் கூறினார்.

அரசியல் ஆதாயத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு வருவதாக மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே கடுமையாக விமர்சித்துள்ளார்.
கர்நாடகாவில் செய்தியாளர்களிடம் பேசிய கரண்ட்லஜே, ஒரு காலத்தில் பரவலாக போற்றப்பட்ட நடிகராக இருந்த கமல்ஹாசன் இப்போது அரசியலுக்கு மாறிவிட்டார். "அனைவரின் மதிப்பும் (புகழ்) எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியாக இருக்காது. கமல்ஹாசன் ஒரு காலத்தில் பெரிய நடிகராகவும், ஹீரோவாகவும் இருந்தார். எல்லோருக்கும் அவரை பிடிக்கும்" என்று அவர் கூறினார்.
இப்போது அவர் அரசியல்வாதியாகிவிட்டார். எனவே, தனது மதிப்பை (அரசியல் ரீதியாக) அதிகரிக்கவும், விளம்பரத்திற்காகவும், அவர் ஒரு சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டார். இவர் ஏற்கனவே கர்நாடகாவில் பணியாற்றியவர். அவர் இங்கே சாப்பிட்டார். அவர் இங்கே தண்ணீர் குடித்தார். அதை அவர் மறந்துவிட்டார். அரசியலுக்காகவும், விளம்பரத்திற்காகவும் அவர் அந்த அறிக்கையை வெளியிட்டார். இது வேலைக்கு ஆகாது. ஆனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று வித்தியாசமில்லை. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.