ஆந்திராவில் 940 என்ஜின்களை திருடிய 9 பேர் கைது
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெனுகொண்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

ஆந்திராவின் சத்ய சாய் மாவட்டத்தில் பெனுகொண்டா மண்டலத்தின் எர்ராஞ்சியில் உள்ள ஒரு உற்பத்தி ஆலையில் இருந்து 940 கியா கார் என்ஜின்கள் திருடப்பட்டது தொடர்பாக ஒன்பது பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெனுகொண்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாரதிய நியாய் சன்ஹிதாவின் பல தொடர்புடைய பிரிவுகளின் கீழ்க் காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். முக்கிய குற்றவாளியான விநாயகன் முத்தி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், அவரது கூட்டாளி சலீம் ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் புங்கனூரைச் சேர்ந்தவர். மீதமுள்ள 6 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அந்த இருவருக்கும் திருட்டு சம்பவத்தில் உதவியதாக கூறப்படுகிறது.
கியா பிரிவின் நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து மார்ச் 19 அன்று இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. விரிவான விசாரணைக்கு வழிவகுத்தது கைது செய்யப்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் என்ஜின்கள் மீட்கப்பட்டன.