Breaking News
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைப்பு
முன்னாள் அமைச்சர் (7) புதன்கிழமை வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரான பின்னர் கைது செய்யப்பட்டு, பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுத்தப்பட்டார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் (7) புதன்கிழமை வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரான பின்னர் கைது செய்யப்பட்டு, பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுத்தப்பட்டார்.
அதன்படி, ஊழல் செய்த சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.