உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் ஆளுநர் ஆர்.என்.ரவி மாறவில்லை: மு.க.ஸ்டாலின்
அண்மையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆளுநர்களின் அதிகாரங்களை குறைத்த போதிலும், ரவி "மாறவில்லை" என்றும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்களில் கையெழுதிடாமல் அப்படியே வைத்துள்ளார் என்றும் கூறினார்.

தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கும் சட்டமூலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தடுத்து நிறுத்தியதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், அண்மையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆளுநர்களின் அதிகாரங்களை குறைத்த போதிலும், ரவி "மாறவில்லை" என்றும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்களில் கையெழுதிடாமல் அப்படியே வைத்துள்ளார் என்றும் கூறினார்.
தஞ்சாவூரில் புதிய பல்கலைக்கழகம் கட்டப்படும் என்று அறிவித்தேன். ஆரம்பத்தில் நான் தயங்கினாலும், பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பல்கலைக்கழகத்திற்கு கலைஞர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர். நாங்கள் சட்டமூலத்தை நிறைவேற்றி மே 2 ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பினோம். 40 நாட்கள் ஆகியும் அவர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. என்று முதல்வர் கூறினார்.