இலங்கையில் மின்சாரக் கட்டணம் 15சதவீதத்தால் அதிகரிப்பு
மின் கட்டண திருத்தம் தொடர்பாக கொழும்பில் நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக நூற்றுக்கு 15 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊடக பேச்சாளர் ஜயனாத் ஹேரத் தெரிவித்தார்.
மின் கட்டண திருத்தம் தொடர்பாக கொழும்பில் நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை மின்சார சபை கடந்த மே மாதம் 16ஆம் திகதி எமக்கு சமர்ப்பித்திருந்தது. அதன் பிரகாரம் கடந்த 27ஆம் திகதி முதல் இதுதொடர்பில் பொது மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கையை நாங்கள் ஆரம்பித்திருந்தோம். 9 மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொண்டோம்.
அதன் பிரகாரம், பொது மக்களின் கருத்துக்கள், மின்சாரசபையின் செலவுகள், நாட்டின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் பொதுவான ஒழுங்குமுறைகளை கருத்திற்கொண்டு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார கட்டணத்தை ஒட்டுமொத்தமாக நூற்றுக்கு 15 வீதத்தால் இன்று முதல் அமலுக்கு வரும்வகையில் அதிகரிப்பதற்கு தீர்மானித்திக்கிறோம்.
இந்த மின்சார கட்டண அதிகரிப்பை 2024 மின் கட்டணத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில், தற்போது நூற்றுக்கு 15 வீதத்தால் அதிகரித்தாலும் எமது மின் கட்டணம் நூற்றுக்கு 8 வீதத்துக்கு கீழே இருந்து வருகிறது. அனைத்து தரப்பினரையும் கருத்திற்கொண்டு எமது ஆணைக்குழு எடுத்திருக்கும் இந்த தீர்மானம் மிகவும் நியாயமானது என்றே நாங்கள் நினைக்கிறோம்.
அதன் பிரகாரம் சிறிய நுகர்வு, அதாவது 90 அலகுகளுக்கு குறைவான மதத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் இந்த முறை எந்த மாற்றமும் இல்லை. 30 அலகுகளுக்கு குறைவான வீட்டு பிரிவிற்கு 8 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி.75 ரூபாவாக இருந்த மாதாந்த கட்டணம் இன்று முதல் 80 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
30முதல் 60 அலகு பிரிவின் ஒரு அலகுக்கு இதுவரை இருந்த விலை 2 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன், அதன் ஒரு அலகின் புதிய விலை 8 ருபா ஆகும். அதன்படி, அந்த பிரிவின் மாதாந்த கட்டணம் 10 ரூபாவால் அதிகரித்து 210ரூபா ஆக மாறியுள்ளது.
இதற்கிடையில், 61 முதல் 90 அலகுகளுக்கான மொத்த கட்டண அதிகரிப்பு 240 ரூபாவாக வரையறுக்கப்பட்டுள்ளது. 91 முதல் 120 அலகுகளுக்கான மொத்த கட்டண அதிகரிப்பு 360 ரூபாவாகும்.
121 முதல் 150 அலகுகளுக்கான மொத்த கட்டண அதிகரிப்பு 600 ரூபாவாகவும் 121 முதல் 180 அலகுகளுக்கான மொத்த கட்டண அதிகரிப்பு 840 ரூபாவாகவும், 180 அலகுகளுக்கு மேல் உள்ள பிரிவிற்கு 2020 ரூபாவாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வீட்டு பிரிவில் மின்சாரக் கட்டணத் திருத்தம் 20 ரூபாவிலிருந்து .2020 ரூபா வரை அதிகரித்துள்ளது.
180 அலகுகளுக்கு மேல் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கான மாதாந்த நிலையான கட்டணங்களில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்பதுடன், அலகுகளுக்கான கட்டணம் மட்டுமே அதிகரிக்கும். தொழில் துறைகளுக்கு கடந்த வருடத்துக்கு ஏற்புடையதாக மின் கட்டணம் 300 அலகுகளுக்கு அதிகரிக்கும்போது ஒரு அலகுக்கான கட்டணம் 4ரூபாவாலும் மாதாந்த கட்டணம் 50 ரூபாவாலும் அதிகரிக்கப்படும்.
பெரிய தொழிற்சாலைகள், ஹோட்டல்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் . 5,000 ரூபா அப்படியே காணப்படுவதுடன், மாதாந்த விண்ணப்பக் கட்டணம் மட்டும் 100 ரூபா அதிகரிக்கும். அதன்படி, மேற்கண்ட பிரிவில் .23ரூபாவாக நிலவிய ஒரு அலகு கட்டணம் .28 ரூபாவாகவும், 13ரூபாவாக நிலவிய ஒரு அலகின் கட்டணம் 15 ரூபாவாகவும் 11 ரூபாவாக நிலவிய ஒரு அலகு கட்டணம் 12ரூபாவாகவும் அதிகரிக்கும்.
கட்டண அதிகரிப்பு 50 சதம் முதல் .9ரூபா வரை அதிகரித்து, மாதாந்த வீத அதிகரிப்பு 50ரூபா முதல் 100ரூபா வரை அதிகரித்துள்ளது என்றார்.