கீதா கோபிநாத் இலங்கைக்கு இரண்டுநாள் விஜயம்
2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச நாணய நிதியத்தில் சேவையாற்றும் முதலாவது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பமாக கீதா கோபிநாத்தின் இந்த விஜயம் காணப்படுகிறது.

இலங்கைக்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் பேரண்ட பொருளாதார இலக்கை அடைந்துக் கொள்ளல், கடன் மறுசீரமைப்பு, மற்றும் நிர்வாகம் தொடர்பில் இலங்கையின் அனுபவம் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து விசேடமாக இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளரின் இலங்கை விஜயம் குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இம்மாதம் 165 மற்றும் 16 ஆம் திகதி இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார்.
2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச நாணய நிதியத்தில் சேவையாற்றும் முதலாவது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பமாக கீதா கோபிநாத்தின் இந்த விஜயம் காணப்படுகிறது.
நிதியமைச்சு,இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஒன்றிணைந்து ஏற்பாhடு செய்துள்ள ' இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல், கடன் மற்றும் நிர்வாகம்'என்ற தொனிப்பொருளின் கீழ் எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள விசேட மாநாட்டின் விசேட அதிதியாக கீதா கோபிநாத் கலந்துக் கொள்ளவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் செயற்திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்படும் மறுசீரமைப்பு திட்டங்கத்தின் முதற்கட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், இடம்பெறும் இந்த மாநாட்டில் பேரண்ட பொருளாதார இலக்கை அடைந்துக் கொள்ளல், கடன் மறுசீரமைப்பு, மற்றும் நிர்வாகம் தொடர்பில் இலங்கையின் அனுபவம் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து விசேடமாக கலந்துரையாடப்படவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேணும் தொடர்பு குறித்து இலங்கை அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவும், ஏனைய பிரதான பங்காளர்களுடனும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் உத்தேசித்துள்ளார்.