Breaking News
மகாராஷ்டிரா: நாக்பூர் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலி, பலர் காயம்
இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர். கிடைக்கப்பெற்ற விவரங்களின்படி, பஜர்கான் பகுதியில் அமைந்துள்ள சோலார் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில், 17,12,2023 காலை 9.30 மணியளவில் வெடிப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.