Breaking News
உயர்மட்ட பேச்சுவார்த்தைக்காக ஜப்பான் பிரதமர் சிறிலங்காவுக்கு வருகை தரவுள்ளார்
புதுடெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வரும் ஜப்பான் பிரதமர், அதன் பின்னர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஒரு நாள் உத்தியோகபூர்வப் பயணமொன்றை மேற்கொண்டு அடுத்த வாரம் சிறிலங்காவுக்கு வருகை தரவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வரும் ஜப்பான் பிரதமர், அதன் பின்னர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சிறிலங்காவின் முக்கிய அபிவிருத்தி உதவி பங்காளிகளில் ஒருவரான ஜப்பானிய தலைவர், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்க அதிகாரிகளை சந்தித்து நாட்டின் கடன் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகள் குறித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.