ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்: ஜனாதிபதி
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பிலான இரண்டு விசாரணைகள் தொடர்பிலான அறிக்கைகள் இறுதித் தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, தொடர் குண்டுவெடிப்பு தொடர்பிலான இரண்டு விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர், இறுதித் தீர்மானங்களை எடுப்பதற்கு முன்னர், நாடாளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டதாக முன்னாள் சட்டமா அதிபர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.