Breaking News
ஆளும் கட்சி எம்.பி.க்கள் அடுத்த வாரம் கொழும்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
தொலைபேசி அழைப்புகள் மூலம் இந்த அறிவிப்பு தனிப்பட்ட முறையில் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜூன் 26 (நாளை) முதல் அடுத்த வாரத்திற்குள் கொழும்பிலிருந்து வெளியேற வேண்டாம் என ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்தின் பிரதம கொறடா அறிவித்துள்ளார்.
இதன்படி, வெளிநாட்டு பயணங்கள் உட்பட கொழும்பிற்கு வெளியில் மேற்கொள்ளப்படும் ஏனைய அனைத்து விஜயங்களையும் இரத்து செய்து பாராளுமன்ற உறுப்பினர்களை கொழும்பிலேயே இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் வட்டாரங்களின்படி, கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு நாடாளுமன்றத்தில் இந்த வாரம் முன்வைக்கப்பட உள்ளதால், தொலைபேசி அழைப்புகள் மூலம் இந்த அறிவிப்பு தனிப்பட்ட முறையில் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.