சிறிலங்காவை கவர்ச்சிகரமான சுற்றுலாதலமாக மாற்றுவதற்கான திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை
"தூய்மையான சிறிலங்கா" முன்னெடுப்பை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை வலுப்படுத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.

சிறிலங்காவை சுற்றுலாப்பயணிகளை கவரும் இடமாக மாற்றுவதற்கு தேவையான திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமாரதிஸாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
"தூய்மையான சிறிலங்கா" முன்னெடுப்பை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை வலுப்படுத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.
சிறிலங்காவை ஆசியாவின் மிகவும் பெறுமதிமிக்க சுற்றாடல் பேண்தகு தீவுகளில் ஒன்றாக தெரியப்படுத்துவது தொடர்பாக நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
கூடுதலாக, கலந்துரையாடல்கள் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார வழிகள் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தின. நாட்டின் சுற்றுலாத்துறையை முன்னேற்றுவதற்காக முறையான மற்றும் முறைசாரா துறைகளைச் சேர்ந்த அனைத்து பங்குதாரர்களையும் ஒன்றிணைப்பது குறித்து சிறப்புகவனம் செலுத்தப்பட்டது.