ஒன்றாரியோ நீதிமன்றம் புதிய ஆசிரியர்களுக்கு கட்டாய கணித தேர்வை உறுதி செய்தது
முதல் முயற்சியிலேயே வெற்றி பெறாமல், அடுத்தடுத்த முயற்சியில் வெற்றி பெறும் ஆசிரியர்களுக்கு தொழிலில் ஈடுபடத் தடை இல்லை.
ஒன்றாரியோவின் உச்ச நீதிமன்றம் புதிய ஆசிரியர்களுக்கான கட்டாயக் கணிதத் தேர்வின் செல்லுபடியை உறுதி செய்துள்ளது. இது அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவிக்கும் கீழ் நீதிமன்றத் தீர்ப்பு ஆரம்ப மற்றும் முழுமையற்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டது என்று கூறியுள்ளது.
தரப்படுத்தப்பட்ட கணிதத் தேர்வுகளில் மாணவர்களின் மதிப்பெண்களை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக - புதிய பாடத்திட்டம் உட்பட – முதல்வர் டக் ஃபோர்டின் அரசாங்கம் 2021 ஆம் ஆண்டில் இந்த தேர்வை அறிமுகப்படுத்தியது.
அந்த ஆண்டு ஜூலை வரையிலான சோதனையின் முடிவுகள் இனத்தின் அடிப்படையில் தரப்படுத்தப்பட்ட சோதனையின் வெற்றி விகிதங்களில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகளைக் காட்டின. வெள்ளை ஆசிரியர் வேட்பாளர்கள் இனமயமாக்கப்பட்ட வேட்பாளர்களை விட அதிக விகிதத்தில் தேர்ச்சி பெற்றனர். இனமயமாக்கப்பட்ட ஆசிரியர்கள் மீது இது ஏற்றத்தாழ்வான தாக்கத்தை ஏற்படுத்தியதால், சாசனத்தில் உள்ள சமத்துவ விதிகளை மீறுவதாகக் கண்டறிந்த பிரதேச நீதிமன்றம், அந்த அடிப்படையில் தேர்வை ரத்து செய்தது. ஒன்றாரியோ அரசாங்கம் அந்தத் தீர்ப்பை எதிர்த்துப் போராடியது. மேன்முறையீட்டு நீதிமன்றம் செவ்வாயன்று மாகாணத்திற்கு ஆதரவாக நின்றது.
2021 ஆம் ஆண்டின் இறுதியில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை தேர்வு எழுதிய 8,350 ஆசிரியர் வேட்பாளர்களில் 95 சதவீதம் பேர் வெற்றி பெற்றனர். இதில் இனக்குழுக்களைச் சேர்ந்த வேட்பாளர்களில் 93 சதவீதம் பேர் அடங்குவர் என்று நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
"பல முயற்சிகளுக்கு மாறாக எம்.பி.டி.யின் முதல் முயற்சிகளின் முடிவுகளின் அடிப்படையில் ஆசிரியர் தொழிலில் நுழைவதில் [கணிதத் திறன் தேர்வின்] பாதகமான தாக்கத்தை அளவிட வேண்டும் என்ற எதிர்மனுதாரர்களின் வாதம் தவறானது" என்று நீதிமன்றம் எழுதியது.
முதல் முயற்சியிலேயே வெற்றி பெறாமல், அடுத்தடுத்த முயற்சியில் வெற்றி பெறும் ஆசிரியர்களுக்கு தொழிலில் ஈடுபடத் தடை இல்லை. எனவே, எம்.பி.டி.யின் முதல் முயற்சிகளில் வெற்றி விகிதங்களில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன என்ற அவதானிப்பிலிருந்து. இது ஆசிரியர் தொழிலில் நுழைவதில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்ற முடிவுக்கு தர்க்கத்தில் ஆதரவற்ற வாதம் உள்ளது."