பன்னாட்டு நாணய நிதிய பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கூட்டும் கூட்டத்தை புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி முடிவு
இந்த விடயம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு பின்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூட்டிய பன்னாட்டு நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வதில்லை என்று தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ச அத்தநாயக்கவினால் நேற்று (09) இந்த விடயம் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு பின்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
பன்னாட்டு நாணய நிதியத்தின் தூதுக்குழு கடந்த முறை சிறிலங்காவில் இருந்ததைப் போலவே, இம்முறையும் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று அத்தநாயக்க மேலும் கூறினார். அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவைப் பெறுவதற்காக ஜனாதிபதி கூட்டும் எந்தவொரு கலந்துரையாடலிலும் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.