ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து சிறிலங்காவுக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி
4 வது தவணையின் மொத்த முதலீட்டு செலவு 68.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வீதி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் பொதுமக்களின் அசௌகரியங்களை குறைப்பதற்கும் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட மற்றும் முழுமையடையாத வீதி பிரிவுகளின் முக்கிய பணிகளை மேற்கொள்வதற்கு நிதியளிப்பதற்காக இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 60 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகப் பெறத் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்காஅரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் சலுகை சாதாரண மூலதன வளங்களில் இருந்து 60 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கப்படும் என நிதி அமைச்சின் வெளிவிவகார திணைக்களம் தெரிவித்துள்ளது.
4 வது தவணையின் மொத்த முதலீட்டு செலவு 68.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 8.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை அரசாங்கம் ஏற்க ஒப்புக் கொண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்திற்கான (தொகுதி 4) தொடர்பான கடன் உடன்படிக்கையில் நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் திரு.கே.எம்.மஹிந்த சிறிவர்தன மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிறிலங்காவதிவிடத் தூதரகத்தின் பணிப்பாளர் திரு.தகாபுமி கடோனோ ஆகியோர் முறையே சிறிலங்காஅரசாங்கம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பில் 2023 நவம்பர் 28 ஆம் திகதி கைச்சாத்திட்டனர்.